திங்கள், 19 அக்டோபர், 2020

காதல் நிச்சயிக்கப்பட்டது...

காதல் நிச்சயிக்கப்பட்டது


டமாடும் சிலையே உனை

செதுக்கி வைத்தது யாரோ...!

உன் வசீகர விழிகளால்-எனை

உன் வசமாக்கி விட்டாயே...!


அங்கங்க ளெல்லாம் காந்த

விசை வாங்கி வந்தாயோ...!

வீதியில் உலவும் விழியெல்லாம்

வியந்து உனைப் பார்கிறதே...!


அழகான உன்மேனி கண்டு

அழலாடிப் போகிறது மனம்,

கடைக்கண் பார்வை கொண்டு-எனை

காற்றாடியாய் சுற்ற விடாதே...!


உந்தன் அழகு புருவங்களோ

எந்தன் உருவத்தை சாய்க்குது,

அதன் கீழுள்ள விழிகளோ

எந்தன் வீழ்ச்சிகாண இமைக்குது...


உன் கன்னங்கள் இரண்டுமே

பல எண்ணங்களை பேசுது,

அதை தொட்டுக் கொள்ள-நான்

வந்தாலோ கைவிரல்கள் கூசுது...!


உதடுகளோ முணு முணுக்குது

மொழிப்பெயர்க்க நினைக்கிறேன்,

எந்தன் காதல் உலகத்திலே

உலக மொழியாக அறிவித்திட...


அதிரூபியே என் அழகானவளே

இதயத்தாழ் திறக்க வா...

நீமட்டும் அதனுள் நுழைந்து

மீண்டும் தாழ்களை பூட்டிடு...!


அடி பஞ்சவர்ணக் கிளியே

நெஞ்சு பஞ்சுதான் கொத்தாதே...

உன் விழிகளின் சூட்டினில்-அதை

பற்ற வைத்துப் போகாதே...


கடிகார நொடி முள்ளாய்

நெடுநேரம் சுற்ற விடுகிறாய்,

மனம் களைப்பே இல்லாமல்

சுற்றிக் கொண்டே இளைப்பாறுது...!


உறக்கம் இல்லையடி பெண்ணே

உன்னை கண்ட நாள்முதல்...

உன்னை உளமாற ஏற்றேன்-நம்

காதலை நிச்சயித்த நாள்முதல்…



-Poonthotta Kavithaikaran

வியாழன், 15 அக்டோபர், 2020

முயற்சி செய்...

 முயற்சி செய்...


தயத்தில் வலிமையிருந்தால்

இமயத்தில் ஏறலாம்,

முடியாதென்று முடங்கினால்-அங்கே

முடிந்தேவிடும் உன்கதை...


முடியும் என்றே

முயன்று தோற்றிடு,

முடியாது என்றால்

பயின்று வென்றிடு...!


பட்டைத் தீட்டினால்தான்

வைரம்கூட மின்னும்,

அடிமேல் அடித்தால்தான்

தங்கமும் ஜொலிக்கும்...!


கல்லாய் அவனுன்னை

படைத்து விட்டான்,

உன்னை செதுக்கிட-எந்த

சிற்பிதான் வேண்டும்...?


உன்னை நீயே

செதுக்கி விடு...!

சிலை ஆகிடு-இல்லை

சிற்பி ஆகிடு...!


பரமபதத்தில் பாம்பு

விழுங்கி விட்டால்,

ஏணியை நினைத்து

விளையாடுவது இல்லையா...?


இதுவும் பரமபதம்தான்...

சில மனிதர்கள் பாம்பாய்,

சில மனிதர்கள் ஏணியாய்,

வாழ்கையென்பது இதுவே...!


வஞ்சனை இல்லாமல்

வாழ கற்றுக்கொள்,

வாழ்கை போட்டிதான்

என்பதையும் மறவாதே...


வீழ்ச்சி இல்லாமல்-என்றும்

எழுச்சி இல்லை,

தோல்வி இல்லாமல்-இன்றும்

வெற்றி இல்லை...!


சருகாய் விழுந்தால்

நாளை உரமாகலாம்...!

விதையாய் விழுந்தால்

நாளை மரமாகலாம்...!


எப்படி விழுவதென்று

நீயே முடிவுசெய்...

இனிதான் இருக்கு-ஓர்

அழகாக பயணம்...!


தோல்வியை கூட

வெற்றியாய் நினை,

அதுவேதான் உனக்கு-முதல்

வெற்றியும் கூட...!


Video

-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


சனி, 10 அக்டோபர், 2020

காலமெல்லாம் காதல் வாழ்க

காலமெல்லாம் காதல் வாழ்க


னைவியின் மடியில்

மயங்கி கிடக்கிறேன்

அவளிதயத் துடிப்பினை-நான்

இதமாய் கேட்கிறேன்...!


செவிகளைத் திறந்து-அவை

உள்ளே நுழைகிறது,

மூளையின் நினைவகத்தை

ஆக்கிரமித்துக் கொள்கிறது...!


நீ தூங்க என்னிதயம்

தடையாக துடிக்கிறதா...?

கொஞ்சநேரம் அவைகளை

நிறுத்தவா என்கிறது...


நானாசை கொண்ட

கண்ணாளனே உனக்கு

தாலாட்டுபாடவா...?

நீ தூங்கு என்கிறது...!


அதைக் கேட்ககேட்க-எனக்கு

மயக்கம் தெளிகிறது,

இருந்தும் மௌனமாய்

கேட்டுக் கொள்கிறேன்...


மன்னவா உன்னை

மண்மீது கண்டேன்,

இப்போது உன்னை

என்மீது கொண்டேன்...!


என்னாசைக் கணவனே

என் ஆபரணம் நீ...!

நான் பொக்கிஷமாய் காக்கும்

சொக்கத்தங்கம் நீ...!


முழு சுதந்திரத்தை-நீ

எனக்குக் கொடுத்தாய்

நானோ உன்னை

அதிகாரம் பண்ணுகிறேன்,


கோபமே இல்லாமல்-என்னை

கொண்டாடுகிறாய் நீ...!

ஏனென் மேல் உனக்கு

அவ்வளவு காதலா என்கிறது...!


மௌனமாய் எனக்குள்

நானே சிரிக்கிறேன்,

பதில்களேதும் இல்லாமலே

பவ்யமாய் தூங்குகிறேன்...


மறு நாளோ

அவள் தூங்க

என் இதயம்

அவளிடம் சொல்கிறது...


அன்னையின் அன்பினை

அப்படியே தந்தவளே...

நானாணென்ற அதிகாரத்தை

முழுவதுமாய் தந்தவளே...!


தாய்க்குப் பின்னால்

தாரம் என்பதை

நம் காதலே-இங்கு

எடுத்துச் சொல்லும்...!


என்னிதய நரம்புகளில்

ஒருங்கிணைந்தவள் நீ...!

அதன் துடிப்புகளை சீராக்கும்

குருதியின் உறுதியும் நீ...!


எனக்குள் முழுவதும்

அடைந்து கிடக்கும்

செல்ல தேவதையே...

மெல்ல கேளடி நீ...!


நீ கேட்க நினைப்பதெல்லாம்

என்னிதயம் பேசுகிறது

உன் செவி திறந்து

உள் நுழைகிறதா...?


என் உயிரானவளே...

உயிருக்கு உதிரமானவளே...

எங்கு கண்டேனோ-உனை

எப்படி கண்டேனோ...?


அன்றே உனக்குள்

நானடைந்து கொண்டேன்,

காதலை தீனியாயிட்டு

என்னை அடைகாத்தாயே...!


முழுவதுமாய் எனைபெற்று

மறுபடியெனக்கு தாயானாயே...

உனக்காக என்னுலகம்

தருவது நியாயம்தானே...!


உன்னோடு வாழ்கிறேன்

நீயில்லா நாட்களோ

எனக்கு நரகமென்பதை

நினைத்தாலே வலிக்கிறது...!



கவிதை காணொளி


-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்