வெள்ளி, 30 அக்டோபர், 2020

தடைசெய்த பகுதி...

தடைசெய்த பகுதி


காற்றுக்கும் அவள்

தடையிட்டப் பகுதி

நோக்கியே படைகொண்டு

நுழைகிறது மழைத்துளிகள்...!

அவனுக்கோ அந்த

துளிகளிடம் பொறாமை...!


Poonthotta Kavithaikaran 

அவளையோ இழுத்தணைத்து

இடுப்போரம் இறுக்கினான்...

இனியெங்கே நீ செல்வாய்

என்றே அத்துளிகளுக்கும்

தடையிட்டுத் துடைத்தான்

கருப்புதட்டால் அவளிடையை...!



Video



-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்

வியாழன், 29 அக்டோபர், 2020

சித்திரப் பேரழகு...

சித்திரப் பேரழகு...

(ஒரு நாள் அடகுக்கடை சென்றிருந்தேன்,அங்கேதான் அவளைக் கண்டு இக்கவி வரிகள் ஊற்றெடுத்தன, அடகுக்கடை தேவதை என் மனதை அடகாய் எடுத்துவிட்டாள்...)


மையிட்ட விழிகொண்டு

மயக்கம் தந்தாயடி,

மூன்றாம் உலகப்போரினை

முன்கூட்டிச் செய்கிறாயடி...!


கலங்கரை விழிகளால்-காதல்

வழிகாட்டி விட்டாயடி...

பாதையறியா பேதைக்கு-முழு

போதயினை கொடுத்தாயோ...!


உன்விழி ஆழத்தை-அதில்

விழுந்தும் நானறியலையே...

எனையெங்கேயோ கூட்டிப்போய்

ஏதேதோ செய்கிறதே...!


அடிமனதின் ஆதங்கமோ

நொடிப்பொழுதில் வருகிறதே...

உன்னாபத்தான விழிதேடி

வழியெல்லாம் காக்கிறதே...!


உந்தன் விழிகளை வரைந்த

ஓவியன்தான் யாரடி...?

ஒருமுறை சொல்லடி 

அவனுக்கு பூஜைசெய்ய...


பிரம்மிக்க வைக்கவே-உனை

பிரம்மன் படைத்தானோ...?

கம்பனைக் கூடவைத்து-உன்

கண்களை செய்தானோ...!


கவிகள்பல பேசும்

உந்தன் கண்களோ...

ஓவியமாய் வரையுதே

உனையெந்தன் நெஞ்சிலே...


நான் கவிஞனாய்மாறி

கவிதை பலகண்டேன்,

உன் விழிகள்போலவே

எந்தக்கவியும் காணலையே...


அறுவை சிகிச்சை

இல்லாமலே என்னிதயம்

மாற்றப்பட்டது போல்

எனக்குள் எண்ணங்கள்...


அசைவப் பார்வையோ

உன்சைவ விழிகளிலே...!

எனைத்தின்று ஏப்பமிட்டு

அசைபோட்டு மெல்கிறதே...!


என்னதான் செய்தாயோ

இடிக்கும் அஞ்சாநெஞ்சத்தை,

மின்னலாய் வந்தென்

நெஞ்சைத் தாக்கிவிட்டாயே...!


மயிலிறகாய் உன்

இமை முடிகளோ

என்னிதயம் வருடுகிறது,

ஆழ்மனதை நெருடுகிறது...!


ஆழியின் ஆழத்தை-உன்

விழிகளில் கண்டேனடி,

விழுந்தேனடி பெண்ணே-இனி

தூங்காதென் கண்ணே...!


நித்திரை பறித்த

சித்திரப் பேரழகு

உன்பவள விழிகளொ

அத்தனை அழகு...!


அகிம்சையான உன்விழியோ

வன்முறையைத் தூண்டுதடி,

சேதங்கள் இல்லாமலே

கலவரங்கள் செய்யதடி...!


அடகுக்கடை தேவதையே-எனை

அடகாய் எடுத்தாயோ...?

என்னை மீட்டுப்போக-எனக்கு

வழியின்றித் தவிக்கிறேனே...


எத்தனைபேரை சாய்த்த

கூர்கத்தி உன்விழியோ...!

என்னையும் கூறுபோட்டு

குத்தாட்டம் போடுகிறது...!


பூவையுன் விழியோ-என்னில்

பூக்களைத் தூவுதே...

அதிகாலை வெண்பனியாய்

எனை குளிரவைக்குதே...!


நேர்கொண்ட என்பார்வையை 

தடுமாற வைக்குதே...

இதுவரையிலும் புரளாமனம்

எதுகைமோனையில் புரளுதே...


புதிரான உன்விழியோ-பூக்கள்

பூக்கவும் தடையிடுதே...

உன்னைப்பார்த்த பின்னாலே

எனையுன்னில் இழந்தேனே...!


ஒருமுறை எனைப்பாரடி

ஓராயிரம் முறைப்பூப்பேன்,

மறுமுறை உனைப்பார்த்தால்-என்

மனதையே உன்னிடந்திறப்பேன்...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


புதன், 28 அக்டோபர், 2020

மனிதர்கள் வாழும் காடு...

மனிதர்கள் வாழும் காடு


ண்ணங்கள் கொட்டிக் கிடந்தும்

பல வண்ணங்கள் தீட்டப்பட்டும்,

எவராலும் ரசிக்கப்படாத ஓர்

அழகிய இதயம் அவளுக்கானது...


அனுமதி கொடுக்கப்படாத பல

கனவுகள் அங்கு ஏராளம்,

தடைசெய்யப்பட்ட நினைவுகளும்

அங்கு தாராளம் உண்டு...


கனவுகளில் கட்டி வைப்பாள்

எவராலும் கட்டப்படாத மாளிகை,

அவள் எண்ணங்களோ அங்கு

பல்லாயிரம் ஓவியங்கள் ஆகும்...


ஆசைகளை அடக்கி வைத்திருக்கும்

அழகிய பெட்டகம் அவளிதயம்,

அவள் ஆசைகளை நிறைவேற்ற 

அவன் ஒருவனுக்கே அனுமதி...


ஊர் எல்லையை கூட

அவள் தாண்டினது இல்லை,

ஆகாய எல்லை வரையிலும்

அவளுக்குள் ஆசை உண்டு...


அவள் வயதோ மூவேழு

வாக்கப்படும் நாளுமேழு

எந்த திசைக் கண்ணனோ-இவளை

கொள்ளையிடும் மன்னவன்...!


எதிர்ப் பார்த்த அந்நாளோ...!

நெருங்கிவரும் நன்நாளோ...!

ஆசை கனவுகள் எல்லாம்

அங்கீகாரம் பெறும் இந்நாளோ...!


அவளுக்கான இதயம் அது...!

அவனுக்கு மட்டுமே அது...!

கெட்டி மேளம் கொட்டிட

அவனோ தாலிக்கொடி கட்டிட...!


இனிதே ஆரம்பமானது இல்லறம்....!

ஒருநாள் இரண்டுநாள் என

அப்படியே நாளுக்கு நாள்

நகர்ந்து கொண்டே போனது...!


இவள் கட்டிவைத்த கோட்டையின்

ஓவியங்கள் களவாடப்பட்டது...

வர்ணங்கள் அத்தனையும் அவனால்

கலைக்கப்பட்டு கலை இழந்தது...!


கனவுகளோ சிதைக்கப் பட்டு,

நினைவுகளோ உடைக்கப் பட்டு,

கோட்டையோ சரிக்கப் பட்டு,

கதிகலங்கிப் போனது அது...!


ஒன்றல்ல இரண்டல்ல அவளின்

ஓராயிரம் ஆசைகளும் அழகிய

பெட்டகத்தோடு அவன் ஒருவனால்

நாடு கடத்தப்பட்டு போனது...


குடித்து வெறித்து நடந்தான்,

குடித்தனம் விட்டு போனான்,

குடிவைக்க கூட்டி வந்தவளின்

கூட்டைக் கலைத்து போனான்...!


பத்தினிப் பெண்ணின் பத்தியத்தை

பார்க்க பாய்ந்தவர்கள் உண்டு...

பயந்தவளோ என்ன செய்வாள்..!

ஓடினாள் கண்ணுக்கெட்டாத தூரம்...


அங்கே தூரத்தெரிந்த கோபுரம்

கோவிலென உள் நுழைந்தாள்,

தஞ்சம் கேட்டு தானலைந்தாள்-அங்கும்

மஞ்சமிடச் சொல்லும் கயவர்களே...!


கண்ணில் நீர் வழிந்தோட

மனதின் குமுறலோடு அழுதாள்...

அழுதாலும் விடவில்லை-அவளது

பூமேனி உழப்பட்டு உதறப்பட்டாள்...!


குற்றுயிரோடு அவளைக் கண்டு

குள்ளநரி கூட்டங்கள் ஓடியது,

மனிதர்கள் வாழும் காட்டில்

கவனத்தோடு ஓட மறந்தாள்...


குருதி உறைந்து போய்

உருக்கப்பட்ட மெழுகானாள் அவள்,

அவளது அழகிய சோலையோ

பாலைவனக் கானலானது இன்று...!


காகிதக் கப்பலுக்கும் அங்கு

இடமில்லை என்று வாசிக்கப்பட்டது,

அவளுடல் விட்டுப்போன உயிரின்

குமுறல்களோ இன்றும் கேட்கிறது...


எண்ணங்களும் வண்ணங்களும்

நிறைந்த அவளாசைகளோ

தண்ணீரில் போடப்பட்டு அழிந்த

ரங்கோலி கோலங்கள் ஆனது...


Video


-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


திங்கள், 26 அக்டோபர், 2020

அப்பாவின் வருகை...

 அப்பாவின் வருகை...


(வெளிநாடு சென்ற தன் தந்தையின் வருகைக்காக ஏங்கித்தவித்த ஒரு குழந்தையின் எதிர்பார்ப்பே இந்த கவிதை வரிகள்...)


டைவிடா உழைப்பு

இடையினில் களைப்பு,

இரும்பு உடலில்

இடைவிடா ஊடல்கள்,


தேகமோ வேர்வை வாடை

வேகமோ மெய் ஜாடை...!

எலும்பின் மஜ்ஜைகள்

உருக்கப்பட்ட நேரங்கள்,


ரத்தத்தை உருமாற்றி

வேர்வையாய் சொட்டவைத்தாய்,

வேதனைகள் அடக்கிவைத்து

சாதனைகள் செய்து வந்தாய்,


கட்டினவள் நினைவு

கணநேரம் வந்தாலும்,

கண்ணெட்டா தூரத்தில்

துயர்பட்ட நெஞ்சமே...!


ஊருக்குள் விட்டமனம்

ஊரெல்லை தாண்டவில்லை,

உறவுக்காய் நீ போன

இடமோ வெகுதூரம்...!


ஆகாயவிமானத்தை-உன்னால்

அண்ணாந்து பார்த்தேன்,

அப்பாவின் வருகையென

நாள்தோறும் ஏமாந்தேன்,


ஐந்தாண்டு பிரிவுக்குபின்

ஆறுவயதில் சேர்ந்தாய்,

விமானச் சத்தமும்-இன்று

விடுப்பு தந்து போனது...!


புகைப்படம் காட்டி

அப்பா என்றாள் அம்மா...!

ப்பா என்று அழைத்த

ஞாபகம் வந்து போகிறது...


நீ கொடுத்தனுப்பின-என்

நட்பு பொம்மைகள் இன்று

மாயையான பொய்

பிம்பங்கள் ஆனது...


உன்னை பார்க்கும் ஆவலில்

ஆசையாய் சோறூட்டிய-என்

தோழி பொம்மையையும்

இன்று மறந்தேன் அப்பா...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


சனி, 24 அக்டோபர், 2020

என் அனைத்துமானவள்...

என் அனைத்துமானவள்


அவளது பார்வையில்

ஒருகணம் கண்கூச,

மறுகணம் நான்பேச

தயக்கத்தோடு நின்றிருந்தேன்...


இடைவிடாமல் இமைக்கிறாள்...!

அவளது விழிகளோ

இடம்தேடி அலைகிறது

என்னிதய சாம்ராஜ்ஜியத்தில்...!


இடத்தைக் கொடுத்தால்

மடத்தைப் பிடிப்பாள்

என்ற அச்சமில்லை-நானும்

அதற்கே ஆசைகொண்டேன்...


கடுகளவு காதல்கொண்டேன்-அதை

பூர்த்தியாய் கொண்டேன்,

கடலளவு காதல் தந்தாள்-அவள்

நடுவினிலே தீவுகளானேன்...


தீவிரமாய் வந்து-அலையாக

தழுவி செல்கிறாள்,

அவளது அன்பினாலே

அதிகாரம் செய்கிறாள்...!


அவளது மடியினில்

குழந்தை போலானேன்,

கொஞ்சி மகிழ்கிறாள்

கெஞ்ச வைக்கிறாள்...


கஞ்ச விழிகளால்

கண்ஜாடை செய்கிறாள்,

கட்டிப் பிடித்தாலோ 

கண்டபடி திட்டுகிறாள்...


அவள் சேலையழகோ-எனக்கு

வண்ணச் சோலையானது,

அவளது உதடுகளோ

நானுறிஞ்சும் இதழ்களானது...!


அவளெச்சில் நீரோ

ஒத்தமரத்து பதநீரு,

ருசிபார்க்க ருசிபார்க்க

போதையேற்றும் கள்ளாகுது…


இரட்டை இதழ்கொண்ட

அதிசய மலரவள்,

நிறம்மாறி வாடாத

நிரந்தர குணத்தவள்...


போதைத் தடுப்புச்

சட்டத்தின் கீழ்

அவளைக் கைது

செய்யப் போகிறேன்…!


கைதியை காதலிக்கும்

ரகசிய காவலனாகிறேன்,

அவளை மகாராணியாக்கி

அன்பு காதலனாகிறேன்...!


அவளை மனைவியாக்கிட

அதிகம் காதல்செய்கிறேன்,

தங்கத்தில் தாலிசெய்ய

மாதத்தவணை கட்டுகிறேன்…!


தாவணிக்குள் இருக்கும்

தாரணி அவளை

புடவைக்குள் குடிவைக்க

பூக்களைக் கேட்கிறேன்…!


பூவையவளுக்கு பூக்களும்

பூஞ்சேலையாக சம்மதிக்க,

அத்தனை பூக்களையும்

அதிகாலையில் நகலெடுத்தேன்...!


அவளது மேனியில்

அழகாக மலரட்டுமென்று

மொட்டுகள் அனைத்தையும்

மெட்டாய் பறித்தேன்…!


அவள் அங்கம்தொட்ட

அத்தனை மலர்களும்

அதிகாலைக் குயிலோடு

அழகான கானம்பாடுது...


ஆவணித் திங்கள்

முதலாம் நாளிலே

தாவணி தென்றலவளும்

சம்மதம் தருவாளா...?


மலரோடு மலரான

மங்கை அவளுக்கோ

மாராப்பாய் ஆனேன்-அவளோ

மத்தாப்பாய் வெடித்தாள்…!


மலர்களைப் போலவே

மௌனம் காட்டுகிறாள்,

வண்டாய் சென்றால்

வெட்கம் கொள்கிறாள்...


தாலி கட்டி அவளுக்கு

கணவனாக சேவைசெய்ய

சம்மதமும் தந்துவிட்டாள்

தாரகை அவளும்...!


அவளோடு மட்டும்

அவளுக்காக மட்டும்

அனைத்தும் ஆனேன்-அவளும்

எனக்கு அனைத்துமானாள்...!!!



Video


கவிஞர் -பூந்தோட்ட கவிதைக்காரன்



வியாழன், 22 அக்டோபர், 2020

மிரட்டுகிறாள்...

 மிரட்டுகிறாள்...


நான் கொடுத்த முதல்

கவிதைக்காக என்னவள்

பதிப்புரிமை கேட்கிறாள்

தாலிகட்டச் சொல்லி,

அதை தினம் பாதுகாக்க

காப்புரிமைக்காக அவள்

முத்தங்கள் கேட்டு மிரட்டுகிறாள்...


Poonthotta Kavithaikaran

கவிஞர் -பூந்தோட்ட கவிதைக்காரன்

புதன், 21 அக்டோபர், 2020

காதலின் அறிகுறி...

காதலின் அறிகுறி


மின்சாரப் பார்வையினை

விழிகளால் வீசிப்போகிறாள்...

மானிடப்பிறவி நான்தான்

ரத்தமுறைந்து போகிறேன்...


கண்ணோரம் காதல்வந்து

இதயத்தை தாக்கியது,

இடியும் மின்னலுமாய்-எனை

பிரித்து மேய்ந்து போனது...!


காதல்வந்த அறிகுறியோ

கள்ளச்சிரிப்பில் தெரிகிறது,

கழுத்தெலும்பு சுழுக்கியும்,

கைவிரல்கள் எழுதுகிறது...



நியூட்டன் கண்டது

புவியீர்பு விசையை,

இக்கிறுக்கன் கண்டதோ

அவளீர்ப்பு விசையை...!


பித்தம் தலைக்கேறி

கிறுக்குபோல பிடிக்குது,

கடைத்தெரு சென்றாலும்-ஊரே

பார்ப்பது போலாகிறது...!


என்னென்னவோ எழுதி

கவிதைப்பந்து செய்கிறேன்,

அவ்வப்போது பிரித்து-அதை

படித்து நானே சிரிக்கிறேன்...!


பாதகத்தி வந்தென்னை

பேய்போல பிடிக்கிறாள்,

மந்திரிச்ச கோழியாய்

மசமசன்னு இருக்கிறேன்...!


பசிதாகம் இல்லாமலே

பட்டினிதான் கிடக்கிறேன்,

காதலிங்கு வந்ததால்

கலகலப்பை இழக்கிறேன்...


பேருந்தின் ஜன்னலோரம்

யார்யாரோ இருக்க,

பாவையவளையே எந்தன்

பார்வைகள் தேடுகிறது...!


கொரோனாவின் காலாவதி

பதினான்கு நாட்களாம்,

இக்காதல் காய்ச்சலுக்கோ

காலாவதியே இல்லையாம்...!


தேவதை அவளையே-காதல்

தேவையோடு நெருங்கினேன்,

தேவை இல்லையென்று-எனை

தேய்பிறையாய் தேயவிட்டாள்...!


திட்டி தீர்த்துவிட்டாள்

தித்திப்பாய் இருந்தது,

காதல் வந்தபின்னால்

இப்படிதான் இருக்குமாம்...?


நானோ ஆறாம்

விரலை புகைக்கிறேன்

அவளது ஐவிரல்களோ-என்

கன்னங்களை எச்சரிக்குது...!


அவளுக்கும் காதல்

வந்த அறிகுறியென்று,

அவளது அறையே-என்

காதோரமாய் சொன்னது...


சொரணைகெட்ட காதலும்

சொர்க்கமாக தெரிகிறது,

சொன்னால்தான் காதலா...?

புரிந்துகொண்டாலும் காதலே...!





-Poonthotta Kavithaikaran