(மறைவில் பூத்த மலர்போல அவளின் அழகிய புன்னகை , புன்னகையில் தொலைந்தேன் , எப்படிதான் எனைத் தொலைத்தேனோ...)
மறைவில் நின்று நீ
மத்தாப்பாய் சிரிக்கிறாய்,
மாமரக் கிளையிடையே
மாஞ்சோலை கிளியா நீ...
புன்னகைத்து எனைப்
புலரவும் வைத்தாய்,
காலையிலென் கற்பனையில்
கலவரமும் செய்தாய்...!
பூவின் புன்னகையோ
புரியாத புதிரல்லவா...?
நீயும் அவைகளும்
என்றுமே ஒன்றல்லவா...?
ஒப்பனைச் செய்ய
வார்த்தைகளுக்கு பஞ்சமடி...
கற்பனை மடியிலே
இப்பொழுது தஞ்சமடி...
வயதுக்கு வந்த பருவ
மங்கையாய் இழுக்கிறது
உன் இதழோரத்தில்
மலர்ந்த ஈரப் புன்னகை...!
உப்பிய கன்னமிரண்டும்
உற்சாகம் ஊட்டுதடி,
கற்கால கற்சிலையாய்
கண்டபடி சாய்க்குதடி...
முல்லைப் பற்களின்
வெள்ளை நிறமோ,
எல்லை தாண்டியெனைக்
கொள்ளைக் கொள்ளுதடி...
மார்போடு மஞ்சமிட்டு
இழுத்தணைக்கத் தோணுதடி,
நெற்றி வகிட்டு முத்தமிட்டு
நித்தம் சாகத் தோணுதடி...!
மங்கையர் குல சுடர்விழியே
மத்தாளங் கொட்டலாமா...?
மஞ்சள் தாலியொன்று
நான் வந்து கட்டலாமா...?
உந்தன் தேகத்துக்கு
இக்கவி எழுதப் படவில்லை,
உன் புன்னகை தேசத்திற்கே
இக்கவியை புனைந்தேனடி...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.