தன்னம்பிக்கை-Motivation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை-Motivation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஏப்ரல், 2021

விதியின் விளையாட்டு

 விதியின் விளையாட்டில்

கொஞ்சம் கல்லானேன்,

காலமெனும் உளியால்-எனை

நானே செதுக்குகிறேன்...!


சிலையோ பழங்கலையோ

காத்திருக்கிறேன் நான்,

சிலையாய் உயிரடைவேனா-பழங்

கலையாய் அழிக்கப்படுவேனா...!


பொய்யான உலகமிது

கூடிநின்னு கும்மியடிக்குது,

கைகளைத் கட்டி வைத்து

செதுக்கிப் பார் என்கிறது...!


இது கேடுகெட்ட உலகமடா

உள்ளத்தில் பெரிய கலகமடா

துணிவு கொஞ்சம் இருக்குதடா

தூக்கியெறிந்தே போவேனடா...


விழிகளில் தேங்கிடும் நீரோ

வலிகளைத் தாங்கி நிற்கிறது...!

அது விழுந்தால் அன்றைக்கு

பூவின் காம்பிலும் பூகம்பமே...!


என் இதயத்தை பாறையென்று

உடைத்து விளையாடும் உறவுகளே...

உளி உடைந்தாலுமென் விரல்

நுனியும் எனக்கு உளியாகும்...!


எனக்கென்ற அடையாளம்

அது அழிக்கப்படும் அபாயம்,

போராடுவேன் உயிர் வாழ

நிச்சயமாய் போராடுவேன்...


ஒரு நாள் நீ பார்க்கும்படியே

எனைச் செதுக்கி வைப்பேன்,

இது நிச்சயம் நடக்கும்-பார்

இப்போது என்னைத் தூற்று...!


சிலந்தி வலையில் சிக்கியச்

சின்னப் பூச்சி போலதான்

புறம்பேசும் உன் வாயிலே

சிக்கித் தவித்துக் கொண்டேன்...


வலையென்ன உன் வாய்ச்

சொல்லையும் அறுத்தெறிந்து 

ஒருநாள் விடுதலையாவேன்-நான்

வளர நீயுமெனக்குத் தேவைதான்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


வியாழன், 15 அக்டோபர், 2020

முயற்சி செய்...

 முயற்சி செய்...


தயத்தில் வலிமையிருந்தால்

இமயத்தில் ஏறலாம்,

முடியாதென்று முடங்கினால்-அங்கே

முடிந்தேவிடும் உன்கதை...


முடியும் என்றே

முயன்று தோற்றிடு,

முடியாது என்றால்

பயின்று வென்றிடு...!


பட்டைத் தீட்டினால்தான்

வைரம்கூட மின்னும்,

அடிமேல் அடித்தால்தான்

தங்கமும் ஜொலிக்கும்...!


கல்லாய் அவனுன்னை

படைத்து விட்டான்,

உன்னை செதுக்கிட-எந்த

சிற்பிதான் வேண்டும்...?


உன்னை நீயே

செதுக்கி விடு...!

சிலை ஆகிடு-இல்லை

சிற்பி ஆகிடு...!


பரமபதத்தில் பாம்பு

விழுங்கி விட்டால்,

ஏணியை நினைத்து

விளையாடுவது இல்லையா...?


இதுவும் பரமபதம்தான்...

சில மனிதர்கள் பாம்பாய்,

சில மனிதர்கள் ஏணியாய்,

வாழ்கையென்பது இதுவே...!


வஞ்சனை இல்லாமல்

வாழ கற்றுக்கொள்,

வாழ்கை போட்டிதான்

என்பதையும் மறவாதே...


வீழ்ச்சி இல்லாமல்-என்றும்

எழுச்சி இல்லை,

தோல்வி இல்லாமல்-இன்றும்

வெற்றி இல்லை...!


சருகாய் விழுந்தால்

நாளை உரமாகலாம்...!

விதையாய் விழுந்தால்

நாளை மரமாகலாம்...!


எப்படி விழுவதென்று

நீயே முடிவுசெய்...

இனிதான் இருக்கு-ஓர்

அழகாக பயணம்...!


தோல்வியை கூட

வெற்றியாய் நினை,

அதுவேதான் உனக்கு-முதல்

வெற்றியும் கூட...!


Video

-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்