மழைக்காலை
வைரத்துளி வந்துவிழ
வதனங்கள் மலர்ந்தது...!
பனிக்காற்று வந்துவீச
பருவம் சிலிர்த்தது...!
மொட்டவிழ்க்கும் பூக்களும்
பட்டு இதழ் விரித்தது...!
வந்து தீண்டும் வண்டுகளோ
திண்டாடி தவித்தது...!
வண்டருந்தும் தேன்சாறு
வான்நீரில் கலந்தது...!
பூப்பெய்த பூக்களுமே
கன்னித்தன்மை இழந்தது...!
ஏமாந்த வண்டினமோ
எங்கேயோ போனது...?
மழைநனையா பூக்கள் தேடி
மதியிழந்து போனது...!
Poonthotta Kavithaikaran
-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்