வியாழன், 22 ஏப்ரல், 2021

ஓர் புன்னகையில் உருவான கவிதை |உன் புன்னகை தேசம் |கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

(மறைவில் பூத்த மலர்போல அவளின் அழகிய புன்னகை , புன்னகையில் தொலைந்தேன் , எப்படிதான் எனைத் தொலைத்தேனோ...)



மறைவில் நின்று நீ

மத்தாப்பாய் சிரிக்கிறாய்,

மாமரக் கிளையிடையே

மாஞ்சோலை கிளியா நீ...


புன்னகைத்து எனைப்

புலரவும் வைத்தாய்,

காலையிலென் கற்பனையில்

கலவரமும் செய்தாய்...!


பூவின் புன்னகையோ

புரியாத புதிரல்லவா...?

நீயும் அவைகளும்

என்றுமே ஒன்றல்லவா...?


ஒப்பனைச் செய்ய

வார்த்தைகளுக்கு பஞ்சமடி...

கற்பனை மடியிலே

இப்பொழுது தஞ்சமடி...


வயதுக்கு வந்த பருவ

மங்கையாய் இழுக்கிறது

உன் இதழோரத்தில்

மலர்ந்த ஈரப் புன்னகை...!


உப்பிய கன்னமிரண்டும்

உற்சாகம் ஊட்டுதடி,

கற்கால கற்சிலையாய்

கண்டபடி சாய்க்குதடி...


முல்லைப் பற்களின்

வெள்ளை நிறமோ,

எல்லை தாண்டியெனைக்

கொள்ளைக் கொள்ளுதடி...


மார்போடு மஞ்சமிட்டு

இழுத்தணைக்கத் தோணுதடி,

நெற்றி வகிட்டு முத்தமிட்டு

நித்தம் சாகத் தோணுதடி...!


மங்கையர் குல சுடர்விழியே

மத்தாளங் கொட்டலாமா...?

மஞ்சள் தாலியொன்று

நான் வந்து கட்டலாமா...?


உந்தன் தேகத்துக்கு

இக்கவி எழுதப் படவில்லை,

உன் புன்னகை தேசத்திற்கே

இக்கவியை புனைந்தேனடி...!



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

சனி, 17 ஏப்ரல், 2021

பலமிழந்த தாவணி

பலமிழந்த தாவணி

சரிய விட்டு

சாய்த்து விட்டாய்,

தென்றல் தீண்டியதால்...

சிறு பார்வையில்

வேர்க்க வைத்தாய்

கைகள் உனை வருடியதால்...

பலமிழந்த உன்

தாவணி முந்தியில்

நானோ பலவீனமானேனடி...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன் 


புதன், 14 ஏப்ரல், 2021

விதியின் விளையாட்டு

 விதியின் விளையாட்டில்

கொஞ்சம் கல்லானேன்,

காலமெனும் உளியால்-எனை

நானே செதுக்குகிறேன்...!


சிலையோ பழங்கலையோ

காத்திருக்கிறேன் நான்,

சிலையாய் உயிரடைவேனா-பழங்

கலையாய் அழிக்கப்படுவேனா...!


பொய்யான உலகமிது

கூடிநின்னு கும்மியடிக்குது,

கைகளைத் கட்டி வைத்து

செதுக்கிப் பார் என்கிறது...!


இது கேடுகெட்ட உலகமடா

உள்ளத்தில் பெரிய கலகமடா

துணிவு கொஞ்சம் இருக்குதடா

தூக்கியெறிந்தே போவேனடா...


விழிகளில் தேங்கிடும் நீரோ

வலிகளைத் தாங்கி நிற்கிறது...!

அது விழுந்தால் அன்றைக்கு

பூவின் காம்பிலும் பூகம்பமே...!


என் இதயத்தை பாறையென்று

உடைத்து விளையாடும் உறவுகளே...

உளி உடைந்தாலுமென் விரல்

நுனியும் எனக்கு உளியாகும்...!


எனக்கென்ற அடையாளம்

அது அழிக்கப்படும் அபாயம்,

போராடுவேன் உயிர் வாழ

நிச்சயமாய் போராடுவேன்...


ஒரு நாள் நீ பார்க்கும்படியே

எனைச் செதுக்கி வைப்பேன்,

இது நிச்சயம் நடக்கும்-பார்

இப்போது என்னைத் தூற்று...!


சிலந்தி வலையில் சிக்கியச்

சின்னப் பூச்சி போலதான்

புறம்பேசும் உன் வாயிலே

சிக்கித் தவித்துக் கொண்டேன்...


வலையென்ன உன் வாய்ச்

சொல்லையும் அறுத்தெறிந்து 

ஒருநாள் விடுதலையாவேன்-நான்

வளர நீயுமெனக்குத் தேவைதான்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

அதிசயமும் அற்புதமும்

அதிசயமும் அற்புதமும்


மோகன மௌனம்,

ஊமை சிரிப்பு,

ஊர்வலம் போகும்

ஒற்றை நிலவு...

அவள்தான் அதிசயமாய்

ஆர்ப்பரிக்கும் அதிசய

மலரும் அவளேதான்...

ஒற்றைக் காலில் அல்ல

இரட்டைக் காலில் நடமாடும்

அற்புத மலரும் அவளேதான்...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கல்லறைக்குள்

 கல்லறைக்குள்


பெண்ணே...

என் கல்லறையை

நீ பார்க்க நேர்ந்தால்...

எனது சின்ன ஆசையை

ஒரு முறை நிறைவேற்றிவிடு,


நாம் காதலித்த 

அத்தனை நாட்களின்

நினைவுகளையும் 

என் நெஞ்சோரமாய்

உன் கண்ணீரில் நனைத்து விடு,


கல்லறைக்குள் 

பூமியின் உஷ்ணம்

என் இதயத்தை வேக

வைத்துக் கொண்டிருக்கிறது!


உன் கண்ணீரால்

குளிர வைத்து விடு...

வேகும்பொழுதும் உன் கண்ணீரில்

குளிர்ந்து கொண்டிருப்பேன்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்