ஞாயிறு, 22 நவம்பர், 2020

அம்மா

அம்மா


யிரம் குறைகூறி

அம்மாவை அதட்டினாலும்

அம்மா இல்லாமல்

அகிலம் இல்லை...


அரியணைகள் ஏறினாலும்

ஆகாயம் தாவினாலும்

அம்மா மடிபோல

எதுவும் இல்லை...


தியாகத்தின் மறுபாதி

அன்னை அவளே...

வலிகளை தாங்கிக்கொண்டு

நமையீன்றது அவளே...!


புழுப்பூச்சி அண்டாமல்

உறங்காமல் காத்தாள்,

பசிதாகம் எடுக்காமல்

அவளையே உணவாக்கினாள்...!


இரத்தமும் சதையும்

பாலாய் பிழிந்தாள்,

பசித்த நேரமெல்லாம்

பக்குவமாய் ஊட்டினாள்..!


பிறை நிலவாய் 

நமைக் காண

பத்து மாதங்கள்

பௌர்ணமி மறந்தாள்..!


அழகான சுமையென்று

அடைகாத்துக் கொண்டாள்,

ஈரைந்து மாதத்தில்

நமையீன்று எடுத்தாள்...!


நாம் உதைத்தால்,

அவளுக்கு வலித்தால்,

தன் மூச்சையடக்கி

நமக்கும் மூச்சுவிடுவாள்...!


பத்தே மாதம்தான்

பகலிரவு பத்தியம்,

பத்துயுக வலிகளும்

அங்கேதான் கண்டாள்...!


ஆகாயம் இடிஞ்சாலும்

அவளே அம்மா...!

அம்மாயென்ற வார்த்தை

என்றுமேயில்லை சும்மா...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்

புதன், 11 நவம்பர், 2020

கல்லறை காதலன்

கல்லறை காதலன்


ண்கள் உறங்கவில்லை

பெண்ணே உன்நினைவோ

கத்திபோல குத்துதடி-மனம்

கத்திகத்தி வலிதேடுதடி...!


வாழ்க்கையோ என்னவென்று

எனக்கின்னும் விளங்கவில்லை,

விதி போடும் கணக்கிற்கு

விடை எழுத முடியவில்லை...!


இதயமோ வலிக்கிறதை-எனக்கு

சொல்லத் தெரியவில்லை,

இதயம் உடைந்து போனதை

ஒட்டி வைப்பார் யாருமில்லை...


உடைபட்ட துகள்களெல்லாம்

உயிரைத்தேடி கிழிக்கிறதே...

கிழிக்கப்பட்ட என்னுயிரோ

ரணமாய் என்னுள் துடிக்கிறது...!


இதயத்தின் ஈரமெல்லாம்

இறுக்கிப்பிழிந்து போனாயே...

இன்னும் கொஞசம் துடிப்போடு

வலிதாங்கிக் கொல்கிறது...!


கண்ணே நம் காதலை

தியாகம் நீ செய்வதற்கு

உன்னவன் என்ன யாகம்

வளர்த்தானோ தெரியவில்லை...


மணக்குமத்தனை பூக்களும்-என்

பிணத்தை மூடிக்கிடக்கிறதே...

நானுயிராய் நினைத்த காதலும்

கல்லறை தேடிப் போனதே...


ஈரமிருக்கிறதா பெண்ணே-உன்

கண்களில் ஈரமிருக்கிறதா...!

ஈரமிருந்தால் ஒருமுறை-என்

கல்லறைக்கு வந்துபோய் விடு...


நானிறந்த சேதியை-உனக்கு

யார் சொல்ல வருவாரோ...

நீசெல்லும் திசையெல்லாம்

என்னுயிரோ தினம் வரும்...!


காற்றோடு கலக்கப்பட்டேன்

உன்மூச்சில் குடிபுகுவேன்,

சம்மதமே இல்லாமல்-உன்

பக்கம் கூட வரமாட்டேன்...!


நீயெனைப் புடைத்தெடுத்தாய்

நானோ புதைக்கப்பட்டேன்,

புதுப்புதுக் கவிதைகளை

தினமெழுதி வைத்துவிட்டேன்...!


ஒருமுறை வந்துபாரடி-என்

கல்லறையோ கவிதையாகும்,

கவிதைக்குள் நானோ

கவிஞனாய் குடியிருப்பேன்...!





-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்




புதன், 4 நவம்பர், 2020

அல்லிராணியின் முகப்பரு

அல்லிராணியின் முகப்பரு


அல்லி ராணியிவள்

ஆகாயம் போலிருந்தாள்,

ஆங்காங்கே நட்சத்திரமாய்-அவள்

முகத்தில் செம்புள்ளிகள்...

ஹார்மோன் வாசிக்கும்

ஆர்மோனிய இசைதான்

அவளைப் பார்த்தபின்

எனக்குள்ளே கேட்கிறது...!


Poonthotta Kavithaikaran

-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்