செவ்வாய், 13 ஏப்ரல், 2021

அதிசயமும் அற்புதமும்

அதிசயமும் அற்புதமும்


மோகன மௌனம்,

ஊமை சிரிப்பு,

ஊர்வலம் போகும்

ஒற்றை நிலவு...

அவள்தான் அதிசயமாய்

ஆர்ப்பரிக்கும் அதிசய

மலரும் அவளேதான்...

ஒற்றைக் காலில் அல்ல

இரட்டைக் காலில் நடமாடும்

அற்புத மலரும் அவளேதான்...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

1 கருத்து:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.