செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கல்லறைக்குள்

 கல்லறைக்குள்


பெண்ணே...

என் கல்லறையை

நீ பார்க்க நேர்ந்தால்...

எனது சின்ன ஆசையை

ஒரு முறை நிறைவேற்றிவிடு,


நாம் காதலித்த 

அத்தனை நாட்களின்

நினைவுகளையும் 

என் நெஞ்சோரமாய்

உன் கண்ணீரில் நனைத்து விடு,


கல்லறைக்குள் 

பூமியின் உஷ்ணம்

என் இதயத்தை வேக

வைத்துக் கொண்டிருக்கிறது!


உன் கண்ணீரால்

குளிர வைத்து விடு...

வேகும்பொழுதும் உன் கண்ணீரில்

குளிர்ந்து கொண்டிருப்பேன்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

4 கருத்துகள்:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.