கல்லறைக்குள்
பெண்ணே...
என் கல்லறையை
நீ பார்க்க நேர்ந்தால்...
எனது சின்ன ஆசையை
ஒரு முறை நிறைவேற்றிவிடு,
நாம் காதலித்த
அத்தனை நாட்களின்
நினைவுகளையும்
என் நெஞ்சோரமாய்
உன் கண்ணீரில் நனைத்து விடு,
கல்லறைக்குள்
பூமியின் உஷ்ணம்
என் இதயத்தை வேக
வைத்துக் கொண்டிருக்கிறது!
உன் கண்ணீரால்
குளிர வைத்து விடு...
வேகும்பொழுதும் உன் கண்ணீரில்
குளிர்ந்து கொண்டிருப்பேன்...
-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்
இதயம் எடுத்தவள் வருவாளா...
பதிலளிநீக்குகண்ணீ துளிகளை விடுவாளா...
வருவாள், வந்தால் பார்க்கலாம்...
நீக்குஅருமை அண்ணா! 🤩
பதிலளிநீக்குநன்றி மா...!!!
நீக்கு