அம்மா
ஆயிரம் குறைகூறி
அம்மாவை அதட்டினாலும்
அம்மா இல்லாமல்
அகிலம் இல்லை...
அரியணைகள் ஏறினாலும்
ஆகாயம் தாவினாலும்
அம்மா மடிபோல
எதுவும் இல்லை...
தியாகத்தின் மறுபாதி
அன்னை அவளே...
வலிகளை தாங்கிக்கொண்டு
நமையீன்றது அவளே...!
புழுப்பூச்சி அண்டாமல்
உறங்காமல் காத்தாள்,
பசிதாகம் எடுக்காமல்
அவளையே உணவாக்கினாள்...!
இரத்தமும் சதையும்
பாலாய் பிழிந்தாள்,
பசித்த நேரமெல்லாம்
பக்குவமாய் ஊட்டினாள்..!
பிறை நிலவாய்
நமைக் காண
பத்து மாதங்கள்
பௌர்ணமி மறந்தாள்..!
அழகான சுமையென்று
அடைகாத்துக் கொண்டாள்,
ஈரைந்து மாதத்தில்
நமையீன்று எடுத்தாள்...!
நாம் உதைத்தால்,
அவளுக்கு வலித்தால்,
தன் மூச்சையடக்கி
நமக்கும் மூச்சுவிடுவாள்...!
பத்தே மாதம்தான்
பகலிரவு பத்தியம்,
பத்துயுக வலிகளும்
அங்கேதான் கண்டாள்...!
ஆகாயம் இடிஞ்சாலும்
அவளே அம்மா...!
அம்மாயென்ற வார்த்தை
என்றுமேயில்லை சும்மா...!
அருமை கவிஞரே...
பதிலளிநீக்கு