வியாழன், 29 அக்டோபர், 2020

சித்திரப் பேரழகு...

சித்திரப் பேரழகு...

(ஒரு நாள் அடகுக்கடை சென்றிருந்தேன்,அங்கேதான் அவளைக் கண்டு இக்கவி வரிகள் ஊற்றெடுத்தன, அடகுக்கடை தேவதை என் மனதை அடகாய் எடுத்துவிட்டாள்...)


மையிட்ட விழிகொண்டு

மயக்கம் தந்தாயடி,

மூன்றாம் உலகப்போரினை

முன்கூட்டிச் செய்கிறாயடி...!


கலங்கரை விழிகளால்-காதல்

வழிகாட்டி விட்டாயடி...

பாதையறியா பேதைக்கு-முழு

போதயினை கொடுத்தாயோ...!


உன்விழி ஆழத்தை-அதில்

விழுந்தும் நானறியலையே...

எனையெங்கேயோ கூட்டிப்போய்

ஏதேதோ செய்கிறதே...!


அடிமனதின் ஆதங்கமோ

நொடிப்பொழுதில் வருகிறதே...

உன்னாபத்தான விழிதேடி

வழியெல்லாம் காக்கிறதே...!


உந்தன் விழிகளை வரைந்த

ஓவியன்தான் யாரடி...?

ஒருமுறை சொல்லடி 

அவனுக்கு பூஜைசெய்ய...


பிரம்மிக்க வைக்கவே-உனை

பிரம்மன் படைத்தானோ...?

கம்பனைக் கூடவைத்து-உன்

கண்களை செய்தானோ...!


கவிகள்பல பேசும்

உந்தன் கண்களோ...

ஓவியமாய் வரையுதே

உனையெந்தன் நெஞ்சிலே...


நான் கவிஞனாய்மாறி

கவிதை பலகண்டேன்,

உன் விழிகள்போலவே

எந்தக்கவியும் காணலையே...


அறுவை சிகிச்சை

இல்லாமலே என்னிதயம்

மாற்றப்பட்டது போல்

எனக்குள் எண்ணங்கள்...


அசைவப் பார்வையோ

உன்சைவ விழிகளிலே...!

எனைத்தின்று ஏப்பமிட்டு

அசைபோட்டு மெல்கிறதே...!


என்னதான் செய்தாயோ

இடிக்கும் அஞ்சாநெஞ்சத்தை,

மின்னலாய் வந்தென்

நெஞ்சைத் தாக்கிவிட்டாயே...!


மயிலிறகாய் உன்

இமை முடிகளோ

என்னிதயம் வருடுகிறது,

ஆழ்மனதை நெருடுகிறது...!


ஆழியின் ஆழத்தை-உன்

விழிகளில் கண்டேனடி,

விழுந்தேனடி பெண்ணே-இனி

தூங்காதென் கண்ணே...!


நித்திரை பறித்த

சித்திரப் பேரழகு

உன்பவள விழிகளொ

அத்தனை அழகு...!


அகிம்சையான உன்விழியோ

வன்முறையைத் தூண்டுதடி,

சேதங்கள் இல்லாமலே

கலவரங்கள் செய்யதடி...!


அடகுக்கடை தேவதையே-எனை

அடகாய் எடுத்தாயோ...?

என்னை மீட்டுப்போக-எனக்கு

வழியின்றித் தவிக்கிறேனே...


எத்தனைபேரை சாய்த்த

கூர்கத்தி உன்விழியோ...!

என்னையும் கூறுபோட்டு

குத்தாட்டம் போடுகிறது...!


பூவையுன் விழியோ-என்னில்

பூக்களைத் தூவுதே...

அதிகாலை வெண்பனியாய்

எனை குளிரவைக்குதே...!


நேர்கொண்ட என்பார்வையை 

தடுமாற வைக்குதே...

இதுவரையிலும் புரளாமனம்

எதுகைமோனையில் புரளுதே...


புதிரான உன்விழியோ-பூக்கள்

பூக்கவும் தடையிடுதே...

உன்னைப்பார்த்த பின்னாலே

எனையுன்னில் இழந்தேனே...!


ஒருமுறை எனைப்பாரடி

ஓராயிரம் முறைப்பூப்பேன்,

மறுமுறை உனைப்பார்த்தால்-என்

மனதையே உன்னிடந்திறப்பேன்...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


2 கருத்துகள்:

  1. Sema. . Sema Sema. ௮ப்பப்பா ... ௮௫மையான வரிகள். . ௮ழகை ரசிச்சு ரசிச்சு ௭ழுதியிருக்கீ௩்க...௮௫மை.

    பதிலளிநீக்கு
  2. பிரம்மிக்க வைக்கவே-உனை

    பிரம்மன் படைத்தானோ...?

    கம்பனைக் கூடவைத்து-உன்

    கண்களை செய்தானோ...

    sema semma

    பதிலளிநீக்கு

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.