வியாழன், 30 ஜூன், 2022

மழைக்காலை

 மழைக்காலை


வைரத்துளி வந்துவிழ

வதனங்கள் மலர்ந்தது...!

பனிக்காற்று வந்துவீச

பருவம் சிலிர்த்தது...!

மொட்டவிழ்க்கும் பூக்களும்

பட்டு இதழ் விரித்தது...!

வந்து தீண்டும் வண்டுகளோ

திண்டாடி தவித்தது...!

வண்டருந்தும் தேன்சாறு

வான்நீரில் கலந்தது...!

பூப்பெய்த பூக்களுமே

கன்னித்தன்மை இழந்தது...!

ஏமாந்த வண்டினமோ

எங்கேயோ போனது...?

மழைநனையா பூக்கள் தேடி

மதியிழந்து போனது...!


Poonthotta Kavithaikaran 



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

புதன், 29 செப்டம்பர், 2021

அன்புள்ள சினேகிதனே...

அன்புள்ள சினேகிதனே...


டை மழையில் நனைந்தேன்,

குடை கொண்டு வந்தாய்,

வெயில் காலம் நடந்தேன்,

நிழல் போலத் தொடர்ந்தாய்...


என்னை சூழ்ந்த காற்றாய்

சுவாசம் வந்து சேர்ந்தாய்,

எண்ணச் சுமையின் தீர்வாய்-பல

வண்ணம் தீட்டிப் போனாய்...!


விம்மிய விழிநீர்த் துளியை

விரல்நுனி கொண்டு துடைத்தாய்...!

மனதின் குமுறலைக் கூட

மறைய வைத்துக் கடந்தாய்...!


கண்ணீர் துடைத்த கரமா-நீ

கருவிழி போன்ற வரமா...?

நான் சாய்ந்தழுத மரமா-நீ

எனைச் சார்ந்துவந்த சுரமா...?


புயல்மழை தாக்கிய பூமியில்

புதுவிடியலாய் வந்தது நீயடா...

பூகம்பம் வந்த பூவினில்-புதுப்

பனியாய் படர்ந்ததும் நீயடா...!


நான் தொலைந்தத் தடத்தில்-எனை

எடுத்துக் கொண்டவன் நீயடா...!

தொலைக்க விரும்பா உயிராய்-என்

உறவாகிப் போனதும் நீயடா...!


ஓ...

கண்டது எல்லாம் கனவா...?

காணும் பொழுது நனவா...?

கண்கள் மூடிடும் உறவா-நீ

கணநொடி நடந்த நிகழ்வா...?


நடமாடும் கனவை கண்டு-குறு

நகை வெட்கம் கொண்டு,

உயிருக்குள் உன்பார்வை சொட்ட,

நெஞ்சுக்குள் வேர்த்து கொட்ட...


எந்தன் உயிர்நாடி எங்கெங்கும்

உன் ஞாபகங்கள் உறவாடி,

உனக்கே உனக்காக என்னை

உயிலெழுதி வைத்தேன் கண்ணா...!


ஆசைநேசகா அதிரூப சுந்தரா

காலங்காலமாக வாழ்ந்திட வேண்டும்,

கணநொடிக் கனவாய் கலைந்து

தேடித் தொலைய வைக்காதே...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


வியாழன், 22 ஏப்ரல், 2021

ஓர் புன்னகையில் உருவான கவிதை |உன் புன்னகை தேசம் |கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

(மறைவில் பூத்த மலர்போல அவளின் அழகிய புன்னகை , புன்னகையில் தொலைந்தேன் , எப்படிதான் எனைத் தொலைத்தேனோ...)



மறைவில் நின்று நீ

மத்தாப்பாய் சிரிக்கிறாய்,

மாமரக் கிளையிடையே

மாஞ்சோலை கிளியா நீ...


புன்னகைத்து எனைப்

புலரவும் வைத்தாய்,

காலையிலென் கற்பனையில்

கலவரமும் செய்தாய்...!


பூவின் புன்னகையோ

புரியாத புதிரல்லவா...?

நீயும் அவைகளும்

என்றுமே ஒன்றல்லவா...?


ஒப்பனைச் செய்ய

வார்த்தைகளுக்கு பஞ்சமடி...

கற்பனை மடியிலே

இப்பொழுது தஞ்சமடி...


வயதுக்கு வந்த பருவ

மங்கையாய் இழுக்கிறது

உன் இதழோரத்தில்

மலர்ந்த ஈரப் புன்னகை...!


உப்பிய கன்னமிரண்டும்

உற்சாகம் ஊட்டுதடி,

கற்கால கற்சிலையாய்

கண்டபடி சாய்க்குதடி...


முல்லைப் பற்களின்

வெள்ளை நிறமோ,

எல்லை தாண்டியெனைக்

கொள்ளைக் கொள்ளுதடி...


மார்போடு மஞ்சமிட்டு

இழுத்தணைக்கத் தோணுதடி,

நெற்றி வகிட்டு முத்தமிட்டு

நித்தம் சாகத் தோணுதடி...!


மங்கையர் குல சுடர்விழியே

மத்தாளங் கொட்டலாமா...?

மஞ்சள் தாலியொன்று

நான் வந்து கட்டலாமா...?


உந்தன் தேகத்துக்கு

இக்கவி எழுதப் படவில்லை,

உன் புன்னகை தேசத்திற்கே

இக்கவியை புனைந்தேனடி...!



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்